ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது


வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிஸார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை 
கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில்  முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் 
தெரிவித்தனர்.
 

 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக