ஞாயிறு, 21 நவம்பர், 2021

அரசாங்கம் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு 
கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நிய செலாவணி முகாமைத்துவம் காரணமாகவே டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை மேலும் பாரதூரமாக மாறியுள்ளது. டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தால் டொலர்களை 
அச்சிட முடியாது.
இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக