ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நாட்டில் அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது 
என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல
 தெரிவித்துள்ளார்.
எனவே, முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 டிசம்பர், 2020

திருகோணமலை – தங்கநகர் நாகபூசணி அம்மன் சிலை திருட்டு

திருகோணமலை – தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கநகர் நாகதம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 29 நவம்பர், 2020

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் இளைஞன்

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து 
வெளியிடும் போது;
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்
 நேற்று 28-11-20.சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு 
காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.அதனால், தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று 
அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா
 வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. 29-11-20.இன்று 
பி.சி.ஆர் பரிசோதனை
 அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

வெலிகமை பகுதியில்சிக்கியது 100 கிலோ ஹெரோயின் மூவர் கைது

மாத்தறை – வெலிகமை பகுதியில் 100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதிரடி படையினரால்.20-11-20. இன்று மதியம் கைது
 செய்யப்பட்டனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் துன்னாலை சுற்றிவளைப்பில் நால்வர் கைது

யாழ் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை பகுதியில்.20-11-20. இன்று  அதிகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஈடுபட்டிருந்ததாக 
தெரியவருகிறது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நால்வரையும் கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியிருந்தவர்கள் என்று 
தெரியவருகிறது.
இதன்போது இவர்களுடன் தொடர்புபட்டிருக்காத நான்கு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

கரணவாயில் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராமத்தில் முகமூடி அணிந்த திருடர்கள் குழு ஒன்று கூரிய ஆயுதங்களுடன் பூசகர் ஒருவரின் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தினைத் திருடிச் சென்றுள்ளது.
கடந்த இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த வீட்டின் வெளிப் பகுதியில் முதியவர் ஒருவர் வழமையாக உறங்குவது வழக்கம். அவரை எழுப்பிய திருட்டுக் கும்பவர் அவரைக் கடுமையாகத் தாக்கி கதவைத் திறக்க வைத்திருக்கின்றது.
அதன் பின்னர் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி அவர்களையும் ஒரு இடத்தில் இருத்திவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளது.
அங்கிருந்த 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான நகை 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான பணம் என்பவற்றை திருடியதுடன், அதே காணியிலிருந்த மற்றொரு வீட்டையும் திறக்கச் செய்து அதன் உள்ளேயும் தேடுதல் நடத்திவிட்டு 
தப்பிச் சென்றுள்ளது.
அங்கு வந்த திருடர்கள் வாள், கத்தி உட்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
 தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் இரு வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரியவருகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 12 நவம்பர், 2020

பழைய போகம்பரை சிறைக் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

கண்டி – பழைய போகம்பரை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள்.12-11-20. இன்று காலை முதலகூரை மீதேறி போராட்டத்தில் 
ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
800 கைதிகள் உள்ள இந்த சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 11 நவம்பர், 2020

விசேட நோயளார் காவு வண்டி கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 
அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் மரக்கறி சந்தையை மீண்டும் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



நாட்டில் அடுத்த ஆண்டில் அரச ஊழியர்களுக்கு கைத்தறி நெசவுத் துணி ஆடை

  நாட்டில் அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 10-11-20.அன்று   கலந்து கொண்ட அமைச்சர் இதற்குரிய 
வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 
என தெரிவித்தார்.
இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக
 அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்-வி-கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2020

மூன்றாம் தவணை கற்றல் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும்திறக்கப்படும்

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப் படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலை யைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ள தாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு
 தெரிவித்துள்ளது.
மேலும் நாடு தழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலை களுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் 
ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 29 அக்டோபர், 2020

நாட்டில் வீட்டிலிருந்து வேலை” மேல் மாகாணத்தில் அமுல்

நாட்டில் மேல் மாகாணத்தில் அரச நிறுவனங்களில் “வீட்டிலிருந்து வேலை” நடைமுறையை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை 
வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர பி.வி.ஜயசுந்தரவால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஊரடங்கு உத்தரவு மேலும் 3 பொலிஸ் பகுதிகளில் அமுலாக்கப்பட்டுள்ளது

காெழும்பு – மொரட்டுவை, ஹோமாகமை மற்றும் களுத்துறை பாணந்துறை பொலிஸ் பகுதிகளில்.27-10-20. இன்று உடன் 
அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு 
அமுலாக்கப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 அக்டோபர், 2020

யாழ்கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு


தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத் தலைவரும் 
தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் அறிவித்துள்ளார்.
இது குறித்த கடிதம் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி உறுப்பினரான பிரதேச சபைத் தலைவர் ஐங்கரனுக்கும் அதே பிரதேச சபையில் அங்கத்துவம் பெறுகின்ற இன்னும் சில தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பிணக்கு 
நிலவிவந்திருக்கின்றது.
இந்நிலையில் எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று மற்றைய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சம்பவத்திற்கு தீர்வு காணுமாறு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை ஐங்கரன் அணுகியிருக்கின்றார்.
ஏனைய உறுப்பினர்களை அழைத்த மாவை சேனாதிராஜா சமரசத்துக்கு உடன்படுமாறும், வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றபட்ட பின்னர் அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் 
தெரிவித்திருக்கின்றனர்.
இருந்தபோதிலும், அவரை நீக்கினாலேயே வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று மாவை சேனாதிராஜா தன்னிடம் தெரிவித்ததால், கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் பிரதேச சபைத் தவிசாளர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக கட்சியின் தலைவருக்கு 26-10.20.இன்று கடிதம் கையளித்தாக ஐங்கரன் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


இனி தொற்றாளியுடன் தொடர்புடையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ 
தளபதி சவேந்திர சில்வா, 26-10-20. இன்று முதல்
 அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினா

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பமுனுகமவில் புளுமென்டல் சங்கவின் மனைவி, மகன் கைது

புளுமென்ட்ல் சங்கவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர்.26-10-20. இன்று பமுனுகமவில் வைத்து கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 மில்லியன் ரூபாய் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து 
மீட்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >



ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்

யாழ் கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இங்கு மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>




கொழும்பு கோட்டையில் இருந்து பஸ்கள் பயணிக்காது

கொழும்பு – கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரசபேருந்து சேவைகளை.25-10-20. இன்று மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை 
உள்ளிட்ட பகுதிகளில்
 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக
 குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் விடத்தல்பளை மற்றும் யாழ் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று
25-10-20.20. இன்றய தினம்  உறுதி 
செய்யப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 அக்டோபர், 2020

பாரிய சர்ச்சை இலங்கையின் முதல் பெண் விமானி முஸ்லிமா தமிழா சிங்களமா???

சமூக வலைத்தளங்களிலும், சில இணையங்களிலும் செய்தியை வேகமாக பரப்புகின்றோம், வேகமாக பகிர்கின்றோம் என்ற ஆர்வக்கோளாறில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை செய்திகளை 
வெளியிடும், அதனை உண்மையா? பொய்யா? சரியா? பிழையா? என சற்றும் சிந்திக்காமல் சமூகங்களுக்கிடையில் 
முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
வேகமாக செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களிடமிருக்கும் ஆர்வம், அதன் உண்மைத்தன்மையை அறிந்து 
கொள்வதில் இல்லை.
இப்படியான சம்பவமொன்றுதான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, சில இணைய செய்தி தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே செய்தியை முரண்பாட்டுடன் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு மக்களை 
குழப்பி வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் விமானியாகும் யுவதி என்ற தலைப்பில் இலங்கையை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட அனுஷா சிறிரத்னா இலங்கையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள்
 வெளியிடப்பட்டிருக்கிறது.
மறுபுறம் இலங்கையில் முதல் முறையாக முஸ்லிம் பெண் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி என்ற தலைப்புக்களில் காத்தான்குடியை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயீஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியானார் என செய்திகள் 
வெளியாகியிருக்கின்றன.
இந்த இவ்விரு செய்திகளிலும் ஒரே புகைப்படம்தான் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடுகின்றது.
இதன் உண்மைத்தன்மையை தற்போது எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை, வெகு விரைவில் உண்மையை உறுதிப்படுத்தி வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த செய்திகளின் உண்மையைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை தவறான செய்திகள், பதிவுகளை மற்றவர்களுக்கு பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஊரடங்கு சட்டம் கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகளில்



காெழும்பு – மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் 
அமுலாக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>



வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்தவர் மரணம்

புத்தளம் – கற்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்த மதுரங்குளியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று (24) மரணமடைந்துள்ளார்.

கற்பிட்டியில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற 40 பேருக்கு இன்று கொரோனா (பிசிஆர்) பரிசோனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த சந்தைக்கு மீன் கொண்டு சென்ற சாரதியான குறித்த நபர் பரிசோதனைக்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இன்று இரவு உடனடியாக வாழைச்சேனைப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 24-10-20.இன்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அங்கு 11 பேருக்கு தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.
மேலும் அங்கு தொற்று அதிகரித்தால் தேவைப்படும் போது ஊரடங்கு அமுல்படுத்த முன்னர் சுகாதார அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட கொரோனா

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டதோடு, 162பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை ஒன்பது இலட்சத்து 99ஆயிரத்து 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மொத்தமாக 34ஆயிரத்து 210பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை எட்டு
 இலட்சத்து 56ஆயிரத்து 234பேர் வைரஸ்
 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில்
 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து
 319பேரின் நிலை 
கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 599பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு
 வீடு திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மன்னாரில் 14 லட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சிக்கிய இருவர்

மன்னாரில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலை மன்னார் கிராமம், சிலுவை நகரைச் சேர்ந்த 21 மற்றும் 49 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களையே குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.மன்னார் பொலிஸாருக்கு 
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தலை மன்னார் கிராம பகுதியில் வைத்தே இந்த கேரள கஞ்சா பொதிகளை
22-10-20. அன்றுவியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.மன்னார்
 மாவட்ட சிரேஸ்ட 
பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் 
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஐயதிலக ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உப.பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து
 செயற்பட்டு குறித்த கேரள கஞ்சா பொதிகளை 
மீட்டுள்ளனர்.மேலும், மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>