வியாழன், 29 அக்டோபர், 2020

நாட்டில் வீட்டிலிருந்து வேலை” மேல் மாகாணத்தில் அமுல்

நாட்டில் மேல் மாகாணத்தில் அரச நிறுவனங்களில் “வீட்டிலிருந்து வேலை” நடைமுறையை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை 
வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர பி.வி.ஜயசுந்தரவால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஊரடங்கு உத்தரவு மேலும் 3 பொலிஸ் பகுதிகளில் அமுலாக்கப்பட்டுள்ளது

காெழும்பு – மொரட்டுவை, ஹோமாகமை மற்றும் களுத்துறை பாணந்துறை பொலிஸ் பகுதிகளில்.27-10-20. இன்று உடன் 
அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு 
அமுலாக்கப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 அக்டோபர், 2020

யாழ்கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு


தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத் தலைவரும் 
தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் அறிவித்துள்ளார்.
இது குறித்த கடிதம் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி உறுப்பினரான பிரதேச சபைத் தலைவர் ஐங்கரனுக்கும் அதே பிரதேச சபையில் அங்கத்துவம் பெறுகின்ற இன்னும் சில தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பிணக்கு 
நிலவிவந்திருக்கின்றது.
இந்நிலையில் எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று மற்றைய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சம்பவத்திற்கு தீர்வு காணுமாறு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை ஐங்கரன் அணுகியிருக்கின்றார்.
ஏனைய உறுப்பினர்களை அழைத்த மாவை சேனாதிராஜா சமரசத்துக்கு உடன்படுமாறும், வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றபட்ட பின்னர் அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் 
தெரிவித்திருக்கின்றனர்.
இருந்தபோதிலும், அவரை நீக்கினாலேயே வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று மாவை சேனாதிராஜா தன்னிடம் தெரிவித்ததால், கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் பிரதேச சபைத் தவிசாளர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக கட்சியின் தலைவருக்கு 26-10.20.இன்று கடிதம் கையளித்தாக ஐங்கரன் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


இனி தொற்றாளியுடன் தொடர்புடையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ 
தளபதி சவேந்திர சில்வா, 26-10-20. இன்று முதல்
 அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினா

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பமுனுகமவில் புளுமென்டல் சங்கவின் மனைவி, மகன் கைது

புளுமென்ட்ல் சங்கவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர்.26-10-20. இன்று பமுனுகமவில் வைத்து கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 மில்லியன் ரூபாய் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து 
மீட்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >



ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்

யாழ் கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இங்கு மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>




கொழும்பு கோட்டையில் இருந்து பஸ்கள் பயணிக்காது

கொழும்பு – கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரசபேருந்து சேவைகளை.25-10-20. இன்று மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை 
உள்ளிட்ட பகுதிகளில்
 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக
 குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் விடத்தல்பளை மற்றும் யாழ் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று
25-10-20.20. இன்றய தினம்  உறுதி 
செய்யப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 அக்டோபர், 2020

பாரிய சர்ச்சை இலங்கையின் முதல் பெண் விமானி முஸ்லிமா தமிழா சிங்களமா???

சமூக வலைத்தளங்களிலும், சில இணையங்களிலும் செய்தியை வேகமாக பரப்புகின்றோம், வேகமாக பகிர்கின்றோம் என்ற ஆர்வக்கோளாறில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை செய்திகளை 
வெளியிடும், அதனை உண்மையா? பொய்யா? சரியா? பிழையா? என சற்றும் சிந்திக்காமல் சமூகங்களுக்கிடையில் 
முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
வேகமாக செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களிடமிருக்கும் ஆர்வம், அதன் உண்மைத்தன்மையை அறிந்து 
கொள்வதில் இல்லை.
இப்படியான சம்பவமொன்றுதான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, சில இணைய செய்தி தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே செய்தியை முரண்பாட்டுடன் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு மக்களை 
குழப்பி வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் விமானியாகும் யுவதி என்ற தலைப்பில் இலங்கையை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட அனுஷா சிறிரத்னா இலங்கையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள்
 வெளியிடப்பட்டிருக்கிறது.
மறுபுறம் இலங்கையில் முதல் முறையாக முஸ்லிம் பெண் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி என்ற தலைப்புக்களில் காத்தான்குடியை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயீஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியானார் என செய்திகள் 
வெளியாகியிருக்கின்றன.
இந்த இவ்விரு செய்திகளிலும் ஒரே புகைப்படம்தான் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடுகின்றது.
இதன் உண்மைத்தன்மையை தற்போது எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை, வெகு விரைவில் உண்மையை உறுதிப்படுத்தி வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த செய்திகளின் உண்மையைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை தவறான செய்திகள், பதிவுகளை மற்றவர்களுக்கு பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஊரடங்கு சட்டம் கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகளில்



காெழும்பு – மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் 
அமுலாக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>



வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்தவர் மரணம்

புத்தளம் – கற்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்த மதுரங்குளியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று (24) மரணமடைந்துள்ளார்.

கற்பிட்டியில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற 40 பேருக்கு இன்று கொரோனா (பிசிஆர்) பரிசோனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த சந்தைக்கு மீன் கொண்டு சென்ற சாரதியான குறித்த நபர் பரிசோதனைக்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இன்று இரவு உடனடியாக வாழைச்சேனைப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 24-10-20.இன்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அங்கு 11 பேருக்கு தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.
மேலும் அங்கு தொற்று அதிகரித்தால் தேவைப்படும் போது ஊரடங்கு அமுல்படுத்த முன்னர் சுகாதார அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட கொரோனா

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டதோடு, 162பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை ஒன்பது இலட்சத்து 99ஆயிரத்து 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மொத்தமாக 34ஆயிரத்து 210பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை எட்டு
 இலட்சத்து 56ஆயிரத்து 234பேர் வைரஸ்
 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில்
 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து
 319பேரின் நிலை 
கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 599பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு
 வீடு திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மன்னாரில் 14 லட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சிக்கிய இருவர்

மன்னாரில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலை மன்னார் கிராமம், சிலுவை நகரைச் சேர்ந்த 21 மற்றும் 49 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களையே குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.மன்னார் பொலிஸாருக்கு 
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தலை மன்னார் கிராம பகுதியில் வைத்தே இந்த கேரள கஞ்சா பொதிகளை
22-10-20. அன்றுவியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.மன்னார்
 மாவட்ட சிரேஸ்ட 
பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் 
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஐயதிலக ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உப.பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து
 செயற்பட்டு குறித்த கேரள கஞ்சா பொதிகளை 
மீட்டுள்ளனர்.மேலும், மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழ் பலாலி உட்பட பல்வேறு தனிமைப்படுத்தலில் பேலியகொட சந்தை வியாபாரிகள்

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் அங்கிருந்த 863 பேர் வரையானோர் யாழ்ப்பாணம் உட்பட இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPOC) இன்று வெளியிட்ட அறிக்கையில் ,
தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 863 பேரில் 180 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 150 குண்டசால தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 192 மட்டக்களப்பு கம்பஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 85 பேர் யாழ்ப்பாணத்தின் 
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட மையம்,110 பேர் பெரியகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மற்றும் இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் மற்றொரு
 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு 68 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரிகளுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை. கொவிட்-19 பணிக்குழு இது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தை ஒரு மினி மையமாகும், அங்கு ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வியாபாரம் செய்கிறார்கள். சந்தையில் கொரோனா தொற்றியதால் அது பரவலாக பரவக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.




வியாழன், 22 அக்டோபர், 2020

நாட்டில் .பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு சட்டம்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறித்த விடயத்தை 
தெரிவித்துள்ளார்.இது தொாடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்றைய தினம் அதிகளவில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 309 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்று காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க
 சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் எனவும், 6 பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 22 பேர் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, நேற்று மாலை மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில் அவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 182 பேலியகொடை மீன் சந்தையிலிருந்தும், 75 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது
.அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2817 ஆக உயர்ந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது

 நிலாவரை.கொம் செய்திகள் >>>