வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட கொரோனா

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டதோடு, 162பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை ஒன்பது இலட்சத்து 99ஆயிரத்து 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மொத்தமாக 34ஆயிரத்து 210பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை எட்டு
 இலட்சத்து 56ஆயிரத்து 234பேர் வைரஸ்
 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில்
 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து
 319பேரின் நிலை 
கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 599பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு
 வீடு திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக